பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
பரந்து ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா
இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் - பரி
தேசமெங்கும் திவ்விய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க
கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும்
பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும்
இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்து
ஆவியில் யாவரும் வளர்ந்திடவே